தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான்
தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான்
சமீபத்தில், சவூதி அரேபியாவின், ரியாத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் "காஷ்மீர் கருப்பு நாள்" (அக்டோபர் 27) நிகழ்ச்சி நடத்த இருந்தது. ஆனால் அப்படி நடத்தக் கூடாது என சவுதி அரசு உத்தரவிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுடனான மோசமான உறவுகள் மேற்கு ஆசிய உறவில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரபு நாடுகளுடன் பாகிஸ்தான் நட்பாக இருந்ததுதான், பயங்கரவாத குழுக்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த தயங்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அரபு நாடுகள்-பாகிஸ்தான் இடையே நட்பு உடைந்துள்ளதால், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது
Comments